Breaking News: மாணவி பலாத்காரம்- காரைக்கால் அரசு பள்ளி ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை
சாமியார் ஆசாராம் பாபு மீதான பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு.
காரைக்கால்: 6-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த அரசு பற்றி அறிவியல் ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அதிரடியாக விதிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் ஏராளமான ஆசிரமங்களை நிறுவியவர் சாமியார் ஆசாராம் பாபு. இவர் மீது சில ஆண்டுகளுக்கு முன்னர் அடுத்தடுத்து சிறுமிகள் பலாத்கார புகார்கள் தெரிவித்தனர்.
குஜராத்தின் சூரத், உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் பகுதிகளைச் சேர்ந்த 3 சிறுமிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் 2013-ம் ஆண்டு ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார். தற்போது ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஆசாராம் பாபு.
இவர் மீதான வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மதுசூதன் சர்மா இன்று தீர்ப்பளிக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆசாராம் பாபு அடைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் சிறைக்கு சென்று தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
இதையடுத்து ஜோத்பூர் சிறையை சுற்றி போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான், ஹரியானா, குஜராத், டெல்லி மாநிலங்களில் ஆசாராம் பாபு ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடும் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஆசாராம் பாபு ஆதரவாளர்கள் 378 பேர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். வட மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த ஏற்கனவே உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.