மோடி அரசுக்கு எதிராக அணி திரட்டும் சித்தராமையா.. தென் மாநில முதல்வர்களுக்கு அழைப்பு
தென் மாநிலங்களுக்கு நிதியை குறைக்கும் மோடி அரசின் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று தென்மாநில முதல்வர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.
Recommended Video
பெங்களூரு: தென் மாநிலங்களுக்கு நிதியை குறைக்கும் மோடி அரசின் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று தென்மாநில முதல்வர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் மோடிக்கும் மத்திய அரசுக்கும் எதிராக ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் மூன்றாவது அணியை அமைத்துள்ளன.
இந்நிலையில் மோடி அரசுக்கு எதிராக கர்நாடக முதல்வர் சித்தராமையா தென் மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதாவது தென் மாநிலங்களுக்கு நிதியை குறைக்கும் மோடி அரசின் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Center asks 15th FC to use 2011 census data instead of 1971 census used so far to determine devolution of taxes. This will further affect the interests of the south:we need to resist. @CMOKerala @CMOTamilNadu @ncbn @TelanganaCMO @Dev_Fadnavis @CMPuducherry https://t.co/6EoDp0xClh
— Siddaramaiah (@siddaramaiah) March 23, 2018
2011 மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு வரியை பிரித்து தர திட்டமிடப்பட்டது. 1971-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தற்போது வரிப்பணம் பிரித்து தரப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்தை தென் மாநிலங்கள் கட்டுப்படுத்தி உள்ளனர்.
ஆனால் வட மாநிலங்களில் குடும்ப கட்டுப்பாடு திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என சித்தராமையா அவரது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.