கர்நாடகாவில் கார் விபத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சித்துநியாம் கவுடா பலி
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. சித்துநியாம் கவுடா கார் விபத்தில் பலியானார்.
அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜம்கண்டி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சித்துநியாம் கவுடா. அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக போட்டியாளரான ஸ்ரீகாந்த் குல்கர்ணியை தோற்கடித்தார்.
சித்துவுக்கு 49 ஆயிரத்து 245 வாக்குகளும், குல்கர்ணிக்கு 46 ஆயிரத்து 450 வாக்குகளும் கிடைத்தது. கோவாவுக்கு சென்ற சித்துநியாம் கவுடா அங்கிருந்து தனது காரில் பகல்கோட்டுக்கு கிளம்பினார்.
துளசிகெரி பகுதியில் வந்தபோது அவர் கார் விபத்துள்ளானது. இதில் படுகாயம் அடைந்த எம்.எல்.ஏ. சித்துவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.