துணை முதல்வர், அமைச்சர்கள் யார்? நாளை முடிவு எடுக்கப்படும்.. குமாரசாமி
கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர், அமைச்சர்கள் யார் என நாளை ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லி: கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர், அமைச்சர்கள் யார் என நாளை ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில முதல்வராக மஜத கட்சியின் குமாரசாமி நாளை மறுநாள் பதவியேற்கிறார். இந்நிலையில் அமைச்சரவை குறித்து காங்கிரஸ் மேலிடத்துடன் ஆலோசிக்கவும் பதவியேற்பு விழாவில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை பங்கேற்க அழைக்கவும் குமாரசாமி இன்று டெல்லி சென்றார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த குமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாக சோனியா காந்தி, ராகுல் காந்தி தெரிவித்தனர்.துணை முதல்வர், அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் குறித்து நாளை ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எடுக்கப்படும். இவ்வாறு குமாரசாமி கூறினார்.