கர்நாடகா: இந்தியாவில் பலியான முதல் நபருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரையும் தாக்கியது கொரோனா!
கர்நாடகா: இந்தியாவில் பலியான முதல் நபருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரையும் தாக்கியது கொரோனா!
Recommended Video
பெங்களூரு: இந்தியாவிலேயே கொரோனா வைரஸுக்கு முதலில் பலியான முதியவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரையும் கொரோனா தாக்கியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கல்புர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் ஹூசைன் சித்திக். செளதி அரேபியாவில் இருந்து ஹைதராபாத் வழியாக கடந்த மாதம் இந்தியாவுக்கு சித்திக் திரும்பியிருந்தார்.
சித்திக்கின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதில் சித்திக்குக்கு கொரோனா தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவிலேயே முதல் முறையாக கொரோனாவுக்கு பலியானர் சித்திக் என்பது உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சித்திக்கின் உறவினர்கள் 4 பேருக்கு ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒருவருக்கு மட்டும் கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா.. வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வோருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத் தொகை.. ஒடிசா அரசு அசத்தல்
இதனைத் தொடர்ந்து கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு இந்தியாவில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். தற்போது உயிரிழந்த சித்திக்குக்கு சிகிச்சை அளித்த 63 வயது மருத்துவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் மருத்துவரும் அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் வருகின்றன.