கர்நாடகா: வாக்காளர் அடையாள அட்டை சிக்கிய ராஜ ராஜேஸ்வரி தொகுதி தேர்தல் ஒத்திவைப்பு
பெங்களூரு ஆர்.ஆர். நகர் தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: பத்தாயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 28-ந் தேதி இத்தொகுதியில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகரில் ஒரு வீட்டில் பத்தாயிரம் வாக்காளர் அடையாள அட்டைகளை பறக்கும் படையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
இதனிடையே ராஜ ராஜேஸ்வரி நகரில் நாளை நடைபெறும் வாக்குப் பதிஐ ஒத்திவைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையில் ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் வரும் 28-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் மே 31-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.