பாதியில் தரையிறக்கப்பட்ட விமானம்.. வெளிநாட்டு சதி.. பரபரப்பு குற்றச்சாட்டு வைக்கும் ராகுல் காந்தி!
ராகுல் காந்தி சென்ற விமானத்தில் ஏற்பட்ட கோளாறுக்கு பின் வெளிநாட்டு சதி இருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
Recommended Video
பெங்களூர்: ராகுல் காந்தி சென்ற விமானத்தில் ஏற்பட்ட கோளாறுக்கு பின் வெளிநாட்டு சதி இருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
தற்போது கர்நாடக தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்காக நேற்று ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் சென்றார். ஆனால் அவர் சென்ற விமானம் பாதி வழியில் பெரிய பிரச்சனைக்கு உள்ளானது.
உயரத்தில் சென்று கொண்டு இருக்கும் போதே, விமானம் வேகமாக கீழே இறங்க ஆரம்பித்தது. முக்கியமாக ஒரு பக்கம் சரிந்து, கீழே வேகமாக சென்றது, விமானத்தை எவ்வளவு முயன்றும் விமானிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவெடுத்து இருக்கிறார்கள்.
ஆனால் இரண்டு முறை முயற்சித்தும் கூட விமானத்தை தரையிறக்க முடியவில்லை. பின் கடைசி நேரத்தில் மூன்றாவது முறையாக முயற்சித்து, ஹப்ளி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினார்கள். இதில் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த பிரச்னைக்கு பின் வெளிநாட்டு சதி இருப்பதாக ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் தெரிவித்து இருக்கிறது. ராகுலை அழிப்பதற்கு திட்டமிட்டு இந்த வேலையை செய்து இருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். ஆனால் இது விமானத்தில் ஏற்பட்ட சிறிய ''ஆட்டோ பைலட்'' எனப்படும் தானியங்கி விமான பிரச்சனை என்றும் கடைசி நேரத்தில் விமானி தானாக செயல்பட்டு விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தற்போதுதான் முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. இந்த பிரச்சனை கர்நாடக தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,