கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் 2018 Live: ஆதரவை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 7 நாட்கள் அவகாசம்
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் 104 இடங்களைப் பெற்ற பாஜகவின் மூத்த தலைவர் எடியூரப்பா, பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க 7 நாட்கள் அவகாசத்தை அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா அளித்துள்ளார்.
பாஜகவுக்கு நோஸ் கட்
காங்கிரஸ் கட்சியின் ஆதரவை ஏற்று ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது ஜேடிஎஸ். ஆளுநருக்கு ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி அனுப்பிய கடிதத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் ஜேடிஎஸ்ஸை வளைக்க நினைத்த பாஜகவின் முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டது.
காங். அதிரடி
கர்நாடகாவில் மே 12-ந் தேதி 222 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவில் 72.13% வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்த வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Just now we met Governor because we are single largest party, and that he allows us to prove majority in the Assembly: BS Yeddyurappa #KarnatakaElections2018 pic.twitter.com/D9RLMU9zVY
— ANI (@ANI) May 15, 2018