கர்நாடகா: பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்.. நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்பு
கர்நாடகாவில் நியூஸ் நேஷன் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது.
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் நியூஸ் நேஷன் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது. பாஜக 105-109 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் தற்போது நியூஸ் நேஷன் தொலைக்காட்சி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.
இதில் பாஜக கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜக கர்நாடகாவில் 105-109 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் 71-75 தொகுதிகளில் வெற்றி பெறும்.ஜேடிஎஸ் 36-40 தொகுதிகளில் வெற்றி பெறும்.மற்ற கட்சி, சுயேட்சைகள் 3-5 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.
இதில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பாஜக அதிக இடங்களை பிடித்தாலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரியவந்துள்ளது.