கர்நாடகா: பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.. டைம்ஸ் நவ் - டுடேஸ் சாணக்கியா கணிப்பு
கர்நாடகாவில் டைம்ஸ் நவ் - டுடேஸ் சாணக்கியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது.
பெங்களூர்: கர்நாடகாவில் டைம்ஸ் நவ் - டுடேஸ் சாணக்கியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது. பாஜக 120 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் தற்போது டைம்ஸ் நவ் - டுடேஸ் சாணக்கியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.
இதில் பாஜக கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜக கர்நாடகாவில் 120 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து இருப்பதால் பெரும்பான்மை பெற 112 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். பாஜக 120ல் வெற்றி பெரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் 73 தொகுதிகளில் வெற்றி பெறும். ஜேடிஎஸ் 26 தொகுதிகளில் வெற்றி பெறும்.மற்ற கட்சி, சுயேட்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சி டுடேஸ் சாணக்கியா என்ற அமைப்புடன் இணைந்து கருத்து கணிப்பு நடத்தி உள்ளது. அதன்படி பாஜக அதிக இடங்களை பிடிக்கும். மேலும் கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.