For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் நாளில் தேடி வந்த குரங்கு.. ஒன்றாக உட்கார்ந்து டிபன் சாப்பிட்ட கர்நாடக எம்எல்ஏ

சுரேஷ் பாபு, மதசார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த எம்எல்ஏவாகும். 2009 மற்றும் 2013ம் ஆண்டுகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற அவர் இந்த தேர்தலிலும் போட்டியிடுகிறார்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    குரங்குடன் அமர்ந்து டிபன் சாப்பிட்டுள்ளார் கர்நாடக எம்எல்ஏ சுரேஷ் பாபு

    தும்கூர்: குரங்குடன் அமர்ந்து டிபன் சாப்பிட்டுள்ளார் கர்நாடக எம்எல்ஏ சுரேஷ் பாபு.

    தும்கூர் மாவட்டம், சிக்கநாயக்கனஹள்ளி தொகுதி எம்எல்ஏ சுரேஷ் பாபு இன்று காலை சிற்றுண்டி சாப்பிட அமர்ந்தார். அப்போது, திடீரென, குரங்கு ஒன்று வீட்டுக்குள் நுழைந்து அவர் இருந்த இடத்திற்கே வந்தது.

    Karnataka MLA Suresh Babu taken tiffin with a monkey

    டைனிங் டேபிள் மேலே வந்து அமர்ந்து கொண்ட குரங்கை பார்த்து ஆச்சரியப்பட்டார் சுரேஷ் பாபு. தனது தட்டில் இருந்த உணவை எடுத்து குரங்கின் வாயில் சுரேஷ் பாபு ஊட்டி விட்டார்.

    தனது உதவியாளரிடம் கூறி ஒரு தட்டில் சாப்பாடு கொடுக்க பணித்தார். அதை சாப்பிட்டு வயிறு நிரம்பிய பிறகு குரங்கு நன்றியுணர்வோடு புறப்பட்டுச் சென்றது.

    சுரேஷ் பாபு, மதசார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த எம்எல்ஏவாகும். 2009 மற்றும் 2013ம் ஆண்டுகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற அவர் இந்த தேர்தலிலும் போட்டியிடுகிறார்.

    தேர்தல் நாளில், குரங்கு தானாக தேடி வந்து சாப்பிட்டது சென்டிமென்ட்டாக நல்லது என நினைத்து சுரேஷ் பாபு அதனுடன் அமர்ந்து சாப்பிட்டுள்ளார் என்கிறார்கள் ஆதரவாளர்கள்.

    English summary
    MLA Suresh Babu taken tiffin with a monkey which has comes to his house on Karnataka polling day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X