For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் மாற்றம்.. வரும் 8ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

காவிரி விவாகாரம் தொடர்பாக ஆலோசிக்க வரும் 7ம் தேதிக்கு பதில் 8ம் தேதி அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெறும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    திடீரென காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா!- வீடியோ

    பெங்களூர்: காவிரி விவாகாரம் தொடர்பாக ஆலோசிக்க வரும் 7ம் தேதிக்கு பதில் 8ம் தேதி அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெறும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

    காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    Karnataka all party meeting will be held on March 8

    தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில் அதனை சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது.

    கர்நாடகத்துக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவு. மேலும் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும் என்றும் கூறியுள்ளது.

    இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த 22 ஆம் தேதி தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியது. இதனால் வரும் 7 ஆம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டது.

    ஆனால் தற்போது தேதி மாற்றப்பட்டு இருக்கிறது. 7ம் தேதிக்கு பதில் 8ம் தேதி அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெறும் என்றுள்ளார்கள்.

    இந்த கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் காவிரி தீர்ப்பு குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    Karnataka all party meeting will be held on March 8. They will discuss abput Cauvery Management Board formation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X