For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக அணைகளில் திறக்கப்படும் காவிரி நீரின் அளவு குறைப்பு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

மைசூர்: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைந்துள்ளது.

கடந்த இரு தினங்களாக, கேரளா, மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், வெள்ளம் படிப்படியாக குறைந்துள்ளது. எனவே, காவிரி நீரை தேக்கி வைக்கும் கேஆர்எஸ், கபினி, ஹாரங்கி அணைகளுக்கான நீர் வரத்து குறைந்துள்ளது.

 Karnataka reducing Cauvery water to Tamilnadu

இதனால், அந்த அணைகளில் இருந்து வெளியாகும் நீர் அளவை கர்நாடகா குறைத்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 90 ஆயிரம் கன அடியாக உள்ளது. இரு தினங்கள் முன்பாக 2 லட்சம் கன அடி நீர் கர்நாடகாவின், காவிரி அணைக்கட்டுகளில் இருந்து திறக்கப்பட்ட நிலையில், இப்போது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Cauvery water to Tamilnadu from Karnataka reducing day by day as rain has been comes down in catchment areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X