கர்நாடகாவில் ஏப். 12ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஸ்டிரைக் ரத்து
கர்நாடகாவில் ஏப். 12ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஸ்டிரைக் ரத்து செய்யப்படுவதாக கன்னட சலுவாளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடகாவில் ஏப். 12ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஸ்டிரைக் ரத்து செய்யப்படுவதாக கன்னட சலுவாளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆரம்பம் முதலே கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்த கன்னட சலுவாளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் ஏப்ரல் 12ஆம் தேதி ஸ்ட்ரைக் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கர்நாடகாவில் ஏப். 12ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஸ்டிரைக் ரத்து செய்யப்படுவதாக வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,
சுப்ரீம் கோர்ட் இன்றைய விசாரணையின் போது காவிரி வாரியம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே கர்நாடகாவில் ஏப்.,12ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஸ்டிரைக் ரத்து செய்யப்படுகிறது.
ஸ்டிரைக் குறித்து மே 3ல் நடக்கும் காவிரி வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும். கர்நாடகாவில் ரஜினி, கமலின் திரைப்படங்களை வெளியிட அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.