For Daily Alerts
Just In
காஷ்மீரில் கலவரம்: 20 பேர் உயிரிழப்பு; 70 பேர் படுகாயம்
இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீரில் அரசு படைகள் மற்றும் போராளிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட கடுமையான மோதல்களில் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர் மற்றும் 70 பேர் படுகாயமடைந்தனர்.
கல்வீச்சில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பொதுமக்கள் நான்கு பேர் கொல்லப்பட்டதாக ஏ எஃப் பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் ஒரே நாளில் இவ்வளவு பேர் உயிரிழந்த மோசமான சம்பவம் இது என்று காஷ்மீரில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் மட்டுமில்லாமல், குறைந்தது மூன்று இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் போராளிகள் என்று சந்தேகிக்கப்படும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
காஷ்மீரின் பெரும்பாலான பொதுமக்கள் சுதந்திரம் வேண்டி பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
பிற செய்திகள்:
- காவிரி விவகாரம்: அதிமுக எம்பி முத்துக்கருப்பன் ராஜிநாமா அறிவிப்பு!
- வளிமண்டலத்துக்குள் நுழைந்த சீன விண்வெளி நிலையம் - தென் பசிஃபிக் பகுதியில் விழும்
- அமெரிக்க பொருட்களுக்கு சீனா 3பில்லியன் டாலர்கள் வரி
- 'பூப்படைதல் நிகழ்ச்சி' சிறுமிகளுக்கு பிடித்துள்ளதா? #BBCShe
- பிபிசி சாம்பியன் கோப்பையை வென்ற ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் #BBCStreetCricket
English summary
At least 20 people are dead and 70 injured in Indian-administered Kashmir after fierce clashes between militants and government forces on Sunday.