காஷ்மீரில் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை
காஷ்மீரில் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை
காஷ்மீர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த கடும் துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் பலியாகி உள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவம் திடீரென்று தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக அடிக்கடி நிறைய தீவிரவாதிகள் கொல்லப்படுகின்றனர். முக்கியமாக அங்கு ஆட்சி கவிழ்ந்து ஆளுநர் ஆட்சி வந்த பின் தாக்குதல் அதிகமாகி உள்ளது.
ஷோபியன், புல்வாமா, பார்திபோரா, மற்றும் கனவ்போரா ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை குல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
இதற்கு பதிலடியாக ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து ராணுவத்துக்கும், தீவிரவாதிக்கும் இடையில் துப்பாக்கிசூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூடு 3 மணி நேரம் நடந்தது.
கடும் துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் பலியாகி உள்ளார்.குல்ஹாம் பகுதியில் நடந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் காயம் அடைத்துள்ளனர். உடலில் காயங்களுடன் தீவிரவாதிகள் தப்பித்து சென்று உள்ளனர்.