காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்.. போலீஸ் ஒருவர் பலி, இருவர் படுகாயம்
காஷ்மீரில் தேசிய மாநாடு தலைவர் வீட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
காஷ்மீர்: காஷ்மீரில் தேசிய மாநாடு தலைவர் வீட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
காஷ்மீர் மாநிலம் ஷோபியன், புல்வாமா, பார்திபோரா, மற்றும் கனவ்போரா ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவம் திடீரென்று தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல், அந்த பகுதிகளில் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று அதிகாலை புல்வாமா பகுதியில் திடீரென்று தீவிரவாதிகள் சோதனை நடத்தினார்கள். நான்கிற்கும் அதிகமான தீவிரவாதிகள் சேர்ந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.
காஷ்மீரில் தேசிய மாநாடு தலைவர் வீட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.தீவிரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஒருவர் பலியாகி உள்ளார். இதில் இரண்டு போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர்.
#Visuals: Terrorist attack on police post outside National Conference leader Gh Muhadin's house in Pulwama: One out of the two injured policemen has succumbed to injuries. #JammuAndKashmir pic.twitter.com/K7edBwgLMi
— ANI (@ANI) July 16, 2018
அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு தற்போது ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.