கேரளாவில் ஆலப்புழாவில் மிக பயங்கர விபத்து.. 4 மாணவிகளை அடித்து தூக்கிய கார்.. வீடியோ
கொச்சி: கேரளாவில் ஆலப்புழாவில் இன்று மதியம் மிக பயங்கர விபத்து ஒன்று நடந்துள்ளது. அதில் அதிவேகத்தில் வந்த கார் 4 மாணவிகளை அப்படியே அடித்து தூக்கி எறிந்துவிட்டு சென்றது
Recommended Video
கேரளாவின் ஆலப்புழாவின் பூச்சகல் அருகே இன்று மதியம் 2 மணி அளவில் சில மாணவிகள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். இதேபோல் சிலர் இருசக்கர வாகனத்திலும் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மாணவிகள் சென்று கொண்டிருந்த சாலையின் எதிர்புறத்தில் இருந்து ஒரு கார் அதிவேகமாக கட்டுப்பாட்டை இழந்தபடி தாறுமாறாக வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நிலை தடுமாறி சாலையின் எதிர்புறத்தில் ஓரமாக சென்று கொண்டிருந்த மாணவிகள் 3 பேர் மீது மோதியது.
இதில் மூன்று மாணவிகள் சாலையில் இருந்து பல அடி தூரம் தூக்கிவீசப்பட்டனர். அதன்பின்னர் சாலை தடுப்பில் மோதிய கார் நிற்காமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது.அப்போது சைக்கிளில் வந்த மாணவி மீது பயங்கரமாக மோதி தூக்கி வீசியது. முன்னதாக இருசக்கரக வாகனத்தில் மீது மோதியது. இறுதியாக மரத்தில் மோதி கார் நின்றது.
இந்த கோர விபத்தில் 4 மாணவிகள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மோசமான விபத்து தொடர்பாக சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோ காண்போரை அதிரவைத்துள்ளது.