For Daily Alerts
Just In
மலையாளிகள் ஓணத்திற்கு வரும் வகையில் பெங்களூரிலிருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில் இயக்குக - பினராயி
பெங்களூரு: பெங்களூரில் நிலவும் மிக மோசமான சூழ்நிலை காரணமாக பெங்களூரிலிருந்து அனைத்து ஊர்களுக்கும் பஸ் போக்குவரத்து ரத்தாகியுள்ளது. குறிப்பாக கேரளாவுக்கு ஒரு பஸ்ஸும் போகவில்லை. அதேபோல கேரளாவிலிருந்தும் ஒரு பஸ்ஸும் வரவில்லை.
இதன் காரணமாக ஓணம் பண்டிகையைக் கொண்டாட கேரளா செல்லத் திட்டமிட்டிருந்த கேரள மாநிலத்தவர் பெரும் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனர். இதையடுத்து கர்நாடகாவில் உள்ள கேரள மக்கள் தங்கள் பகுதிக்கு திரும்பும் வண்ணம், 2 சிறப்பு ரயில்களை இயக்க அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஓணம் பண்டிகை கேரள மாநிலத்தவருக்கு முக்கியமான பண்டிகையாகும். ஆனால் கன்னடர்கள் நடத்தி வரும் வன்முறை காரணமாக பெங்களூரு போர்க்களமாக காணப்படுகிறது. இதனால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
As there is no respite in Bangaloru proest, Kerala bound Omni buses have been cancelled.