For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தைக்கு பால் கொடுத்தேன்.. முடிந்ததும் கழுத்தை இறுக்கி கொன்னுட்டேன்.. அதிர வைத்த பெண்!

குழந்தையின் கழுத்தை இளம்பெண் நெரித்து கொன்றுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    New born baby Body was found inside a college bag in kerala

    இடுக்கி: "குழந்தைக்கு பால் கொடுத்தேன்.. அப்பறம் துணியால் அதன் கழுத்தை இறுக்கி கொன்னுட்டேன்" என்று இளம்பெண் ஒருவர் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.

    கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வாத்திக்குடி பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கட்டப்பனையில் உள்ள அரசு கல்லூரியில் எம்எஸ்ஸி படித்து வருகிறார்.

    இந்நிலையில் திடீரென தனது தோழிக்கு போன் செய்து, "எனக்கு குழந்தை ஒன்னு பிறந்து திடீர்னு இறந்துடுச்சு.. வீட்டுக்குத் தெரியாது. அதனால இந்த காலேஜ் பேக்கில்-லேயே வெச்சு சுத்தி வெச்சிருக்கேன். அப்பறம் எடுத்து தூர போடணும். ஆனா அதுக்கு உன் உதவி எனக்கு வேணுமே" என்று சொல்லி உள்ளார்.

     ஹேமலதா வீட்டு பக்கம் இறந்து கிடந்த நாய்.. அநியாயமா பறி போன பெண்ணின் உயிர்.. அலட்சியத்தால் விபரீதம்! ஹேமலதா வீட்டு பக்கம் இறந்து கிடந்த நாய்.. அநியாயமா பறி போன பெண்ணின் உயிர்.. அலட்சியத்தால் விபரீதம்!

    குழந்தையின் சடலம்

    குழந்தையின் சடலம்

    இதை கேட்டு நம்ப மறுத்தார் தோழி. உடனே ரம்யா, வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பி, கூடவே ஒரு போட்டோவையும் அனுப்பினார். உண்மையிலேயே ஒரு இறந்த குழந்தையின் போட்டோவை பார்த்ததும் அந்த பெண் அலறிவிட்டார். புத்தகம் கொண்டு வரும் அந்த பையில் குழந்தையின் சடலம் கிடந்தது.

    விசாரணை

    விசாரணை

    உடனடியாக, இதை பற்றி போலீஸுக்கும் ரம்யாவின் குடும்பத்துக்கும் தகவல் சொன்னார். போலீசாரும் விரைந்து வந்து, ரம்யாவின் பையை வாங்கி பார்த்தனர். அப்போது பையில், ஒரு பிளாஸ்டிக் கவரில் சுருட்டப்பட்டிருந்தது குழந்தையின் சடலம்.. ரம்யாவிடம் அப்போதே விசாரணையை ஆரம்பித்தனர்.

    கர்ப்பம்

    கர்ப்பம்

    இதை பற்றி ரம்யா போலீசில் சொல்லும்போது, "என் காதலனுடன் ஏற்பட்ட உறவில் நான் கர்ப்பம் ஆகிவிட்டேன். இந்த விஷயத்தை காதலனிடம் போய் சொன்னேன். அவன் உடனே போய் தற்கொலை செய்து கொண்டான். எவ்வளவோ முயற்சி செய்தும், என்னால் குழந்தையை கலைக்க முடியவில்லை. அதனால் யாருக்கும் தெரியாமல் இந்த விஷயத்தை மறைத்து வைத்தேன்.

    இறந்துவிட்டது

    இறந்துவிட்டது

    ஆனால் 6 மாச கர்ப்பமாக இருந்த எனக்கு திடீரென போன வாரம் எங்க வீட்டு பாத்ரூமில் குறைபிரசவத்தில் குழந்தை பிறந்துவிட்டது. பிறக்கும்போதே அது இறந்தும்விட்டது. என்ன செய்வதென்றே தெரியாமல் புத்தக பையில் வைத்து சடலத்தை மறைத்து வைத்தேன்" என்றார். ஆனாலும் ரம்யா சொல்வதை போலீசார் நம்பவே இல்லை. எதற்கும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரட்டும் என்று காத்திருந்தனர்.

    போஸ்ட் மார்ட்டம்

    போஸ்ட் மார்ட்டம்

    உண்மையிலேயே குழந்தை இறந்துதான் பிறந்ததா என்பது தெரியாமலும் இருந்தனர். இந்த சமயத்தில் கோட்டயம் மெடிக்கல் காலேஜில் நடந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. அதில், குழந்தையின் உடலில் பால் இருந்ததும், மூச்சுத் திணறியே இறந்ததும் தெரியவந்தது. குழந்தையின் கழுத்தை நெரித்ததற்கான அடையாளமும் இருந்தது.

    பால் தந்தேன்

    பால் தந்தேன்

    இதை வைத்து அப்போது போலீசார் ரம்யாவிடம் விசாரணை நடத்தியதில், எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டார். "எனக்கு கல்யாணம் ஆகல.. ஆனா குழந்தை பிறந்துவிட்டது... இது வெளியில தெரிஞ்சா அசிங்கம்னு நினைச்சு நான்தான் குழந்தையை கொன்னேன்.. சாகடிக்கறதுக்கு முன்னாடி அந்த குழந்தைக்கு பால் கொடுத்தேன்.. அதுக்கப்புறம் துணியால் அந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றேன்" என்று வாக்குமூலம் தந்துள்ளார்.

    English summary
    20 year old college girl killed her baby in bathroom and confessed to kerala police
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X