கேரளா கோழிக்கோடு விமான விபத்து.. அவசர உதவி எண்கள் அறிவிப்பு
கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு விமான விபத்தால் உதவி தேவைப்படுவோருக்கு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுளளது.
Recommended Video
கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு 184 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட 191 பேருடன் வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்தது. ஒடுதளத்தில் இருந்து பள்ளத்தில் விழுந்தள்ளது, இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட 16 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
45 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனமழையால் விபத்து நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மற்றும் உதவி தேவைப்படுவே0ருக்காக உதவி எண்களை கோழிக்கோடு விமான நிலையம் அறிவித்துள்ளது. கோழிக்கோடு விமான நிலைய கட்டுப்பாட்டு எண் 0483-2719493 ஐ தொடர்பு கொள்ளலாம். துபாயில் உள்ள இந்திய தூதரகத்தை கு 056 546 3903, 0543090572, 0543090572, 0543090575: என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0483 2736320, கோழிக்கோட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0495 2376901 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.