கேரளாவில் ஏற்பட்டது அதிதீவிர பேரிடர்.. மத்திய அரசு அறிவிப்பு
கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் அதிதீவிர பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்னை: கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் அதிதீவிர பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது. இந்த நூற்றாண்டிலேயே இல்லாத அளவிற்கு கேரளாவில் பெரிய மழை பெய்துள்ளது. 700க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள்.
1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கே இப்போதுதான் வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இந்த வெள்ளம் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் அதிதீவிர பேரிடர் என்று அறிவித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி 247 பேர் பலியாகி உள்ளனர். 17,343 வீடுகள் சேதம் அடைந்துள்ளது.
கேரள வெள்ள பாதிப்பு மிகவும் மோசமான இயற்கை பேரிடர். இதனால் கேரளாவை அதிதீவிர வெள்ள பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவித்துள்ளது. ஆனால், கேரளாவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்கவில்லை.