சிறுவர்கள் பலாத்காரம்- மசூதி நிர்வாகம் தந்த புகாரில் மதராசா ஆசிரியர் கைது!
கோட்டயம்: சிறுவர்களை பலாத்காரம் செய்ததாக கேரளாவில் 63 வயது மதராசா ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டயம் அருகே கொடுங்காலூர் மதசாராவில் ஆசிரியராக பணிபுரிந்தவர் யூசுப். சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக யூசுப் மீது புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக மசூதியை நிர்வகிக்கும் அமைப்பு விசாரணை நடத்தி போலீசில் புகார் கொடுத்தது. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் யூசுப்பை கைது செய்தனர்.
Neasamani: நேசமணியே.. எங்கள் பாசமணியே.. பாசத்துடன் மதுரை மைந்தர்கள் கண்டித்து ஒட்டிய போஸ்டர்
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், 12 சிறுவர்களுக்கும் மேலாக யூசுப் பலாத்காரம் செய்துள்ளார் என்றார். இந்த குற்றத்தை யூசுப் ஒப்புக் கொண்டதாகவும் தாம் சிறுவயதில் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் 25 வயதில் இருந்தே சிறுவர்களை பலாத்காரம் செய்து வருவதாகவும் யூசுப் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
அத்துடன் தம்மை பலாத்காரம் செய்தவரின் மகளை தாம் பலாத்காரம் செய்து பழிதீர்த்துவிட்டதாகவும் யூசுப் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.