கேரளாவில் பாகுபலி போல துதிக்கையில் ஏற முயன்ற நபர் - தூக்கி அடித்த யானை- வீடியோ
கேரளாவில் பாகுபலி படம் போல யானை மீது ஏறப்போன பாகனை கோபத்தோடு முட்டி தள்ளியது யானை.
Recommended Video
கொல்லம் : பாகுபலி படத்தில் வருவது போல யானை மீது ஏற சென்ற பாகனை கோபத்தோடு தூக்கி அடித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள கரிமன்னூர் என்னும் இடத்தில் ஒருவர் தான் வளர்த்து வரும் யானைக்கு வாழைப்பழத்தை கொடுத்து கொண்டிருந்தார். அதை அவரது நண்பர் பேஸ்புக்கில் லைவ் செய்தார்.
அந்த லைவ் வீடியோவில் அடுத்து வந்த காட்சிகளைப் பார்த்தவர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
விபரீத முயற்சி
அந்த இளைஞர் தன்னிடம் உள்ள கடைசி வாழைப்பழத்தை யானையிடம் கொடுப்பது போல் பாவனை காட்டிவிட்டு பாகுபலி படத்தில் வருவது போல தந்தங்களை பிடித்து தும்பிக்கையை மிதித்து யானை மீது ஏற முயற்சித்துள்ளார்.
தூக்கி அடித்த யானை
இது ஆபத்து அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அந்த நபரின் தந்தை எச்சரித்தார். ஆனால் அந்த நபரோ கேட்காமல் மீண்டும் முயற்சித்தபோது, கோபம் கொண்ட அந்த யானை தூக்கி அடித்தது. இதில் பாகுபலியாக முயற்சித்த நபர் படுகாயமடைந்தார்.
ஃபேஸ்புக்கில் லைவ்
இந்த காட்சிகள் ஃபேஸ்புக்கில் லைவ் ஆக ஒளிபரப்பானது. இதை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாகுபலி பிரபாஸ்
பாகுபலி பிரபாஸ் ஆக முயற்சி செய்து படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் அந்த நபர். கிராபிக்ஸ் காட்சியை எல்லாம் நிஜமென்று நம்பினால் இப்படித்தான் கட்டு போட்டு படுத்திருக்க வேண்டும்.