"பிரேக்கிங் நியூஸ்" திடீரென நேரலையில் தோன்றிய தன் போட்டோ.. திக்குமுக்காடிய பெண் ரீடர்.. செம வீடியோ
தன் பெயரை தானே செய்தியில் வாசித்துள்ளார் நியூஸ் ரீடர்
திருவனந்தபுரம்: டிவியில் நியூஸ் படித்து கொண்டே வந்தவர், திடீரென தன்னுடைய பெயரையும், போட்டோவையும் லைவ்-ஆக பார்த்தார்.. பிறகு அதுகுறித்த செய்தியையும் அப்படியே சேர்த்து சொன்ன அதிசயம், ஆச்சரியம் நடந்துள்ளது!
கேரளாவின் புகழ்பெற்ற சேனல் மாத்ருபூமி... இந்த டிவியின் தலைமை இணை ஆசிரியர் ஸ்ரீஜா ஷியாம்..2007-ம் ஆண்டில் மீடியாவில் நுழைந்தவர்... 6 வருடமாக மாத்ருபூமியில் வேலை பார்த்து வருகிறார்.. எப்போதுமே முகத்தில் தென்படும் அமைதி கலந்த புன்னகைதான் இவரது ஆல்வேஸ் பிளஸ்...
இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே கேரளாவில் உண்டு.. வழக்கம்போல் நேற்று லைவ்-ஆக நியூஸ் வாசித்து கொண்டிருந்தார்... அப்போது திடீரென ஒரு பிரேக்கிங் நியூஸ் வந்தது.
நியூஸ் ரீடர்கள்
"பிரேக்கிங்" எதிர்பாராத செய்தி என்பதால், அது என்ன செய்தி என்பது முன்னதாகவே நியூஸ் ரீடர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. பிரேக்கிங் என்னவென்று பார்த்து, அடுத்த நிமிஷமே, அது குறித்த செய்திகளை கூடுதலாக வழங்க வேண்டும்.. அந்த அளவுக்கு நியூஸ் ரீடர்கள் தயாராகவும், போதுமான விவரங்களுடனும் இருக்க வேண்டும்.
விருது பட்டியல்
அந்த வகையில் ஸ்ரீஜாவும் அந்த பிரேக்கிங்கை என்னவென்று பார்த்தார்.. கேரள அரசின் ஊடக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது... அப்போது அந்த அறிவிப்பில் ஸ்ரீஜாவின் பெயரே வந்தது.. இதை பார்த்ததும் ஸ்ரீஜாவுக்கு ஸ்வீட் ஷாக்.. லைவ் ஓடி கொண்டிருக்கிறது.. தன் பெயரை இப்படி விருது வழங்குவதில் அறிவிக்கப்பட்டதும் , அவரால் எதுவுமே பேச முடியவில்ல.. ஆச்சரியப்பட்டார்.. கொஞ்சம் திணறினார்.
மாத்ருபூமி
பிறகுதான் சுதாரித்துக்கொண்டு அந்த செய்தியை அவர் வாசித்தார்... "கேரள அரசின் 2018-ம் ஆண்டின் சிறந்த செய்தி தொகுப்பாளர் விருது மாத்ருபூமி ஊடகத்தின் தலைமை இணை ஆசிரியர் ஸ்ரீஜா ஷியாமுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது" என்று சொல்லும்போதே அவரது போட்டோ, பெயரும் டிவியில் காட்டப்பட்டது. தனக்கு மாநில விருது கிடைத்ததை தானே அறிவித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
வைரல் வீடியோ
நம்ப முடியாத அறிவிப்பினால் திக்குமுக்காடி போனார் ஸ்ரீஜா.. அந்த உணர்வுகளை பகிரங்கமாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், திணறியதும், பூரித்து போனதும் கவனிக்கத்தக்கதாகவே இருந்தது. ஸ்ரீஜாவின் இந்த அறிவிப்பும், அவரது உணர்வும்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.. ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து, பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்!