கேரளாவில் பரிதாபம்.. நிபா பாதித்த நோயாளிக்கு சிகிச்சையளித்த நர்ஸ் பலி
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. நோயாளிக்கு சிகிச்சையளித்த நர்ஸ் ஒருவரே கேரளாவில் பலியாகியுள்ளார்.
உயிர் கொல்லி வைரசான நிபா, கேரளாவில் படு வேகமாக பரவி வருகிறது. இதுவரை 15 பேர் வரை பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்கள் நிபா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நிபா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்ற நோயாளிகளை கவனித்துக்கொண்ட நர்ஸ் லினி என்பவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
31 வயதான லினி, பெரம்ப்பா தாலுகா மருத்துவமனையில் சிகிச்சையளித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கும் நோய் பரவி உயிரிழந்தார். லினிக்கு கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
பழம் தின்னி, வவ்வால்கள் மூலமாகத்தான் நிபா வைரஸ் பரவுகிறது என்பதால், அவற்றை பிடிப்பதில் கேரள வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.