For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விபத்தில் சிக்கிய கோழிக்கோடு விமானத்தில் பயணித்த மூன்று தமிழக பயணிகள்.. விவரம்

Google Oneindia Tamil News

கோழிக்கோடு: விபத்தில் சிக்கிய கோழிக்கோடு விமானத்தில் தமிழக பயணிகள் முகமது ஜிடான் பைசல் பாபு, ஷனிஜா பைசல்பாபு, ஷாலா ஷாஜகான் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது.

Recommended Video

    கோழிக்கோடு விமான விபத்து.. இரண்டாக உடைந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்

    துபாயில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு 184 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட 191 பேருடன் வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்தது. விமானி துணை விமானி மற்றும் குழந்தை உள்பட 16 பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் சிக்கியவர்களில் 170 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

    kerala plane crash: three tamilnadu passenger were traveled in Kozhikode flight

    இந்நிலையில் தமிழக பயணிகள் 3 பேர் இந்த விமானத்தில் பயணித்திருப்பது ஏர் இந்தியா வெளியிட்டுளள பயணிகள் பட்டியலில் தெரியவந்துள்ளது. துபாயில் இருந்து வந்த பயணிகளில் பெரும்பாலானவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் பணியாற்றி பலர் அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

    இதில் தமிழக பயணிகள் முகமது ஜிடான் பைசல் பாபு, ஷனிஜா பைசல்பாபு, ஷாலா ஷாஜகான் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் ஷாஜகான் நீலகிரி மாவட்டம் கூடலுரைச் சேர்ந்தவர் ஆவர். முகமது ஜிடான் பைசல் பாபு, ஷனிஜா பைசல்பாபு, ஆகியோர் துபாய் வாழ் தமிழர்கள் ஆவர். இவர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. இந்த விபத்தால் விமானத்தில் பயணித்த பெரும்பலான பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.அனைவரும் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    tamilnadu passengers Mohammad zidan Faisal Babu, Shanija Faisal Babu and Shala Shahjahan were traveling in the Kozhikode plane that crashed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X