ஜோலியின் லீலைகள்.. கோவையில் பாய்பிரண்ட்.. பல அபார்ஷன்களுக்கு இவரே காரணமாம்.. விசாரிக்க போலீஸ் முடிவு
ஜோலியின் ஆண் நண்பரிடம் கேரள போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்
Recommended Video
கோழிக்கோடு: ஏகப்பட்ட அபார்ஷன்களை செய்த ஜோலிக்கு, நெருக்கமான பாய்ஃபிரண்ட் ஒருத்தர் கோவையிலும் இருக்கிறாராம்.. அவரை பிடித்தால் நிறைய விஷயம் வெளியே வரும் என்று கேரள போலீசார் உறுதியாக உள்ளனர்.
சொத்துக்காக குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை ஆட்டுக்கால் சூப்பில் சயனைடு வைத்து கொன்றார் ஜோலி என்ற 47 வயது பெண். 17 வருடங்களுக்கு முன்பு இந்த கொலைகளை செய்த ஜோலி இப்போது கைதாகி உள்ளார்.
சொத்துக்காக கொலை என்றாலும், பெண்களை கண்டாலும் ஜோலிக்கு பிடிக்காதாம். அதனால் கொலை செய்த 6 பேரில் 3 பேர் மாமியார் உட்பட பெண்களாக இருந்திருக்கிறார்கள். இவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மாமனார்
ஒவ்வொரு நாளும் ஜோலியிடம் விசாரணை நடத்தும்போதும், வெளியாகும் ஒவ்வொரு தகவல்களும் நமக்கு வயிற்றில் புளியை கரைப்பதுபோல உள்ளது. மாமனாருக்கு காபியில் விஷம் கலந்து தந்துள்ளார். மாமியாருக்கு சூப்பில் விஷம் கலந்து தந்துள்ளார். எல்லோருமே மருமகள் தரும் சாப்பாட்டை நம்பி சாப்பிட்டே செத்து போயுள்ளனர்.
அபார்ஷன்கள்
இதற்காகவே சயனைடு விஷத்தை டப்பா, டப்பாவாக ஜோலி வாங்கி வீடு முழுக்க வைத்திருக்கிறார். 3-வது
கல்யாணம் பண்ண துணிந்த ஜோலிக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் அடிக்கடி வெளியில் ஊர்சுற்றி வந்துள்ளார்.. நிறைய இடங்களுக்கும் போய் தங்கி உள்ளார்.. நெருக்கமாக இருந்ததில், ஏகப்பட்ட அபார்ஷன்களை செய்துள்ளார்.
கோவை நண்பர்
இதில் ஒரே ஒரு ஆண் நண்பருடன் அடிக்கடி ஊர் சுற்றி உள்ளார். இதை ஜோலியின் செல்போனை ஆராய்ந்தபோதுதான் போலீசாருக்கு தெரியவந்தது. அந்த ஆண் நண்பர் கோவையை சேர்ந்தவராம். யார், என்ன என்று தெரியவில்லை. முதலில் இதை பற்றி கேட்டதற்கு, ஜோலி மறுத்துள்ளார்.
கேரள போலீஸ்
பிறகு போலீசார் துருவி துருவி கேட்கவும்தான், ஆண் நண்பரை பற்றி ஒப்புக் கொண்டுள்ளார். ஆண் நண்பருடன் கோவை வந்து போவது, ஜோலி வீட்டு உறவினர்களுக்கும் தெரிந்திருக்கிறது. அதனால், அந்த ஆண் நண்பரிடம் கோவை வந்து கேரள போலீசார் விசாரிக்க உள்ளனர். அதுவும், ஜோலியின் போலீஸ் காவல் முடிவதற்கு முன்னமேயே கோவைக்கு ஜோலியுடன் வந்து விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூல் பதில்
ஆனால், போலீசார் என்ன கேள்வி கேட்டாலும் சரி, ஜோலி கொஞ்சம் கூட டென்ஷன் ஆவதே கிடையாது. ஒரு பதட்டமும் இல்லாமல் கூலாக பதில் சொல்லி கொண்டிருக்கிறார். ஒருபடி மேல போய், ஏன் என்னை நீங்க கைது செய்யவில்லை என்று போலீசாரிடமே கேள்வியும் கேட்டுள்ளார்.