பம்பையில் போராட்டக்காரர்கள் ஹெல்மெட்டை திருடிய கேரள போலீசார்.. கேமராவில் பதிவான காட்சிகள்
Recommended Video
சபரிமலை: பம்பையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட போலீசார், போராட்டக்காரர்கள் வாகனங்களை தாக்கியதோடு, ஹெல்மெட்டை கூட தூக்கிச் சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி மக்களிடையே கோபத்தை உருவாக்கியுள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, சென்னையில், போராட்டக்காரர்களை தடியடி நடத்தி விரட்டிய போலீசார், அவர்கள் வாகனங்களை அடித்து நொறுக்கியும், ஆட்டோக்களுக்கு தீ வைத்தும் அட்டகாசம் செய்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சபரிமலை பம்பாவில் கேரளா போலீஸ் இதேபோன்ற அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ள காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளன. பம்பையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளை எட்டி உதைத்தும், லத்தியால் கண்ணாடிகளை உடைத்தும் வீசுகின்றனர் போலீசார்.
பெண் பக்தர்கள் வந்த வாகனங்களை தாக்கியாதகத்தான் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர் போலீசார். ஆனால் போலீசாரே இப்படி பிறர் வாகனங்களை சட்ட விரோதமாக அடித்து நொறுக்குவது மட்டும் நியாயமா, என்று கேள்வி எழுப்புகிறார்கள் மக்கள்.
[சபரிமலையில் தொடர்ந்து நீடிக்கும் பதற்றம்... இன்று பந்த்.. தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்!]
சந்தடி சாக்கில் ஒரு போலீஸ்காரர் வண்டியில் இருக்கும் ஹெல்மெட்டை ஸ்வாகா செய்துள்ள கொடுமையும் அரங்கேறியது. நீங்களே இந்த கொடுமையை பாருங்கள்.