For Daily Alerts
Just In
தேர்வில் 'பிட்' அடித்து மாட்டிய கேரள போலீஸ் ஐஜி- விசாரணைக்கு டிஜிபி உத்தரவு!!
திருவனந்தபுரம்: கேரளாவில் போலீஸ் ஐஜி ஒருவர் பரிட்சையில் பிட் அடித்து சிக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
கேரளாவின் திருச்சூர் ரேஞ்ச் ஐஜியாக பணியாற்றுபவர் ஜி.ஜே.ஜோஸ். ஐபிஎஸ் அதிகாரியான ஜோஸ், மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில், எல்.எல்.எம் (சட்டப்படிப்பு) படித்து வந்தார்.
இந்நிலையில், கலமாச்சேரியிலுள்ள செயின்ட் பவுல் கல்லூரியில் ஜோஸ், தேர்வு எழுத சென்றார். அப்போது, கைடு ஒன்றில் இருந்து பேப்பரை கிழித்து, பிட் போட வைத்து, தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பல்கலைக்கழகம், ஜேஸை தேர்வு எழுத தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. போலீஸ் அதிகாரி பிட் அடித்து மாட்டிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கேரள போலீஸ் டிஜிபி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
Comments
English summary
A senior police officer, Thrissur range Inspector General (IG) of Police T.J. Jose IPS (conferred) was allegedly caught cheating in an examination conducted by the Mahatma Gandhi University.