கிண்டல் செய்த மகனை கொலை செய்த தாய்.. தீ வைத்து எரித்த கொடூரம்!
கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தன் மகனை எரித்து கொலை செய்து இருக்கிறார்.
Recommended Video
கொல்லம்: கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தன் மகனை எரித்து கொலை செய்து இருக்கிறார். சாதாரணமாக கிண்டல் செய்த காரணத்திற்காக இந்த கொலை சம்பவம் நடந்து இருக்கிறது.
இந்த கொலையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடந்து இருக்கிறது. மிகவும் சாமர்த்தியமாக அந்த பெண் இந்த கொலையை செய்து இருக்கிறார்.
இந்த பெண் கொடுத்த வாக்குமூலம் போலீசை நடுங்க செய்துள்ளது. தற்போது இவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
மகனை காணவில்லை
கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஜெயா. 43 வயது நிரம்பிய இவர் நேற்று தன் கணவனுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்று இருக்கிறார். அங்கு 14 வயது நிரம்பிய தன்னுடைய மகனை காணவில்லை என்று புகார் அளித்து உள்ளார். கடந்த 24 மணி நேரமாக அவன் எங்கே சென்றான் என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
போலீஸ் விசாரணை
போலீஸ் இந்த வழக்கை பதிவு செய்து விசாரித்தது. ஆனால் எவ்வளவு தேடியும் அந்த சிறுவன் குறித்த எந்த துப்பும் கிடைக்கவில்லை. எனவே போலீஸ் அந்த சிறுவனின் தாயிடம் விசாரணையை தொடங்கியது. ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் முன்னுக்கு பின் முரணான தகவலை கொடுத்து இருக்கிறார். இதனால் போலீசின் சந்தேகம் அதிகம் ஆகியுள்ளது.
உண்மை
அந்த பெண்ணின் கையில் பெரிய தீ காயம் ஒன்று இருந்திருக்கிறது. இதற்கு விளக்கம் கேட்டதற்கு அந்த பெண் பதில் சொல்ல தெரியாமல் குழம்பிப் போய் உள்ளார். இதை அடுத்து போலீஸ் விசாரணையை தீவிர படுத்தியது. இதனால் போலீசிடம் அந்தப் பெண் கொலை செய்த உண்மையை ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
காரணம் என்ன
அந்த சிறுவனுக்கும் ஜெயாவிற்கு இடையில் ஏற்பட்ட சிறிய சண்டையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அந்த சிறுவன் ஜெயாவை கிண்டல் செய்து இருக்கிறான். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அந்த பெண் அவனை கொலை செய்து இருக்கிறார்.
பாதிக்கப்பட்டவர்
அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவர் கணவன் கூறியுள்ளார். அந்த சிறுவனை இந்த பெண் தீ வைத்து கொலை செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல் வீட்டில் இருந்து 200 மீட்டர் தள்ளி இருக்கும் இடத்திற்கு இழுத்து சென்று புதைத்து உள்ளார். பின் வீட்டிற்கு வந்து சமையல் வேலைகளை கவனித்து இருக்கிறார்.