For Daily Alerts
Just In
கர்நாடகாவில் மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து 4 குழந்தைகள் உடல் கருகி பலி
கர்நாடகா மாநிலத்தில் மண்ணெணெய் ஸ்டவ் வெடித்து 4 குழந்தைகள் உடல் கருகி பலியான சம்பவம் நெஞ்சையே உலுக்கியது.
குல்பர்கா: கர்நாடகா மாநிலத்தில் ஒரு கடையில் இருந்த மண்ணெணெய் அடுப்பு வெடித்த விபத்தில் 4 குழந்தைகள் உடல் கருகி பலியாகினர்.
குல்பர்கா மாவட்டம், சின்சோலி பகுதியில் ஒரு கடையில் மண்ணெண்ணெய் ஸ்டவ் வைத்து சமையல் வியாபாரம் செய்து வந்தனர். அப்போது அடுப்பில் மண்ணெண்ணெய்யை ஊற்றி விட்டு அதை பம்ப் செய்த போது அழுத்தம் அதிகரித்ததால் பலமாக வெடித்து சிதறியது.
இதனால் அக்கடை தீப்பிடித்து எரிந்தது. அதில் கடையில் இருந்து சின்னஞ்சிறிய குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துவிட்டனர். அந்தக் குழந்தைகள் யாரென்று தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
Kerosene stove burst in Gulbarga District, Karnataka. 4 children were died in spot.
Story first published: Tuesday, September 26, 2017, 8:23 [IST]