5-ம் கட்ட வாக்குப் பதிவு: 51 தொகுதிகளில் பாஜகவுக்கு எத்தனை தேறும்?
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வரும் 51 தொகுதிகளில் கடந்த முறை பாஜக 41 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆனால் இம்முறை நிலைமை தலைகீழாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வரும் மாநிலங்கள்: பீகார் 5; ஜம்மு காஷ்மீர் 2; ஜார்க்கண்ட் 4; மத்திய பிரதேசம் 7; ராஜஸ்தான் 12; உத்தரப்பிரதேசம் 14; மேற்கு வங்கம் 7.
மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு காஷ்மீர் தவிர இதர மாநிலங்கள் அனைத்தும் இந்தி பேசும் மாநிலங்கள். 2014 லோக்சபா தேர்தலில் ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளையும் அள்ளியது பாஜக. ஆனால் 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. இன்று ராஜஸ்தானில் 12 லோக்சபா தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பாஜக மலைபோல் நம்பும் தென்மாநில கட்சிகள்... லிஸ்ட்டில் திமுகவும்!
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரையில் இன்று 7 லோக்சபா தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 2014 தேர்தலில் பாஜக இந்த 10-ல் 3 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. எஞ்சிய 7 தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கும் பாஜக வேட்பாளருக்கும் இடையேயான வாக்கு சதவீத இடைவெளி என்பது 23.9%.
உத்தரப்பிரதேசத்தில் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் சோனியா மற்றும் ராகுல் காந்தி போட்டியிடுகின்றனர். இத்தொகுதிகளில் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கட்சிகள், காங்கிரஸுக்கு ஆதரவு அளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் தொகுதியில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஆனால் இத்தொகுதியில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை. மேலும் ஜார்க்கண்ட், மத்திய பிரதேச மாநிலங்களில் அண்மைய சட்டசபை தேர்தலில் பாஜக கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.