தந்தையின் சிகிச்சைக்கு உதவி கேட்டு மோடிக்கு கடிதம் எழுதிய சிறுவர்கள்: உடனே உதவிய பிஎம்ஓ
டெல்லி: உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தங்களின் தந்தைக்கு உதவி செய்யுமாறு பிரதமர் மோடிக்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்த 2 சகோதரர்கள் கடிதம் எழுதினர். இதையடுத்து அவர்களின் தந்தைக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க பிரதமர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள நவ்பஸ்தா பகுதியைச் சேர்ந்தவர்கள் சகோதரர்கள் சுஷாந்த் மிஸ்ரா(13), தன்மயி மிஸ்ரா (8). அவர்களின் தந்தை சரோஜ் மிஸ்ராவுக்கு கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்துமா பிரச்சனை உள்ளது. ஆஸ்துமா பிரச்சனை அதிகமாகியதை அடுத்து சரோஜ் கடந்த 6 மாதங்களாக தனது டெய்லர் தொழிலை செய்ய முடியவில்லை.
Two Kanpur brothers write to PM Modi for financial help due to father's illness, PMO ensures treatment free of cost pic.twitter.com/jr5O2PL4ES
— ANI (@ANI_news) March 3, 2016
இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது. சுஷாந்த் மற்றும் தன்மயி பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டனர். சரோஜ் மிஸ்ராவின் சிகிச்சைக்கு அவரது நண்பர்கள், உறவினர்கள் பணம் கொடுத்து வந்துள்ளனர். அவர்களும் ஏழை என்பதால் அவர்களால் தொடர்ந்து உதவ முடியவில்லை.
இந்நிலையில் சுஷாந்த் மற்றும் தன்மயி தங்களின் தந்தையின் சிகிச்சைக்கு பண உதவி செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து அவர்களின் தந்தைக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க பிரதமர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரதமர் மோடிக்கு சிறுவர்கள் உதவி கேட்டு கடிதம் எழுதினால் உடனே நடவடிக்கை எடுக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.