உ.பி என்கவுண்டர் ராஜ்: பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் மேனேஜர்.. காரணத்தை பாருங்க!
காரை நிறுத்தாமல் சென்ற ஆப்பிள் நிறுவன ஊழியரை உத்தர பிரதேச போலீஸ் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.
லக்னோ:காரை நிறுத்தாமல் சென்ற ஆப்பிள் நிறுவன ஊழியரை உத்தர பிரதேச போலீஸ் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் நாள் ஒன்றுக்கு மொத்தம் 4 என்கவுண்டர்கள் செய்யப்படுகிறது. சின்ன திருட்டு வழக்கில் உள்ளே செல்லும் நபர்கள் கூட பிணமாக வெளியே அனுப்பப்படுகிறார்கள்.
இப்படி எக்கவுண்டர் செய்யப்படுவதால் அதிகமாக கொலை செய்யப்படுவது இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தின் லக்னோவில் கோமதி நகரில் ஆப்பிள் மொபைல் நிறுவன மேனேஜர் விவேக் திவாரி, உத்தர பிரதேச போலீஸ் அதிகாரி பிரசாந்த் சவுத்திரி மூலம் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நிறுத்தாமல் சென்றுள்ளார்
ஆப்பிள் மொபைல் நிறுவன மேனேஜர் விவேக் திவாரி நேற்று அலுவலக வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் சிறிய விழா என்பதால் அவசர அவசரமாக சென்று இருக்கிறார். இடையில் போலீஸ் அவரை சோதனை செய்ய முயற்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் அவசரத்தால் காரை நிறுத்தாமல் இவர் சென்றுள்ளார்.
[திருச்சியில் புதிதாக வாங்கிய வீட்டை பார்க்க சென்ற போது விபத்து.. 8 பேர் பலியான சோகம்! ]
துரத்தினார்
இந்த நிலையில் போலீஸ் அதிகாரி பிரசாந்த் சவுத்திரி, விவேக்கை வேகமாக துரத்தி சென்றுள்ளார். வேகமாக பைக்கில் சென்று கண்ணாடி வழியே விவேக்கை சரமாரியாக சுட்டுள்ளார் போலீஸ் பிரசாத். நான்கு முறைக்கும் மேல் விவேக்கை சுட்டுள்ளார்.
சுட்டுக் கொலை செய்தார்
இதனால் நிலைகுலைந்த விவேக் சாலை ஓர மரத்தில் மோதியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் மரணம் அடைந்தார். அவர் தலையிலும் முகத்திலும் மொத்தம் மூன்று குண்டுகள் பாய்ந்து அவர் இறந்திருக்கிறார்.
பிரச்சனை
இந்த சம்பவம் அங்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இத்தனை நாட்கள் நுற்றுக்கணக்காக மக்கள் அங்கு என்கவுண்டர் செய்யப்பட்ட போது அம்மாநில முதல்வர் பெரிய அளவில் எதிர்ப்பை சந்திக்கவில்லை. ஆனால் தற்போது நடுசாலையில் ஒருவர் இப்படி கொலை செய்யப்பட்டு இருப்பது பெரிய பிரச்சனையாகி உள்ளது.