கொச்சியில் தரையிறங்கியபோது பாதையிலிருந்து விலகிய ஏர் இந்தியா விமானம்... 102 பயணிகள் உயிர் தப்பினர்
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்துக்கு 102 பயணிகளுடன் அபுதாபியிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம் இன்று அதிகாலை தரையிறங்கியபோது பாதையிலிருந்து விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொச்சி: கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ஏர் -இந்தியா விமானம் தரையிறங்கியபோது திடீரென பாதையிலிருந்து விலகி ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அபுதாபியிலிருந்து 102 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று கொச்சி விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை 2.15 மணிக்கு வந்தது. அப்போது விமானம் தரையிறங்கத் தொடங்கியது.
அப்போது திடீரென நிலைதடுமாறி ஓடுபாதையை விட்டு விலகியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் கலக்கமடைந்தனர். எனினும் விமானி மிகவும் சாமர்த்தியத்துடன் செயல்பட்டதால் விமானம் இயல்பு நிலையை எட்டியது.
An Air India express veered off from taxiway at Kochi airport while approaching parking bay, today. All passengers evacuated safely. pic.twitter.com/T8zElXQPHe
— ANI (@ANI) September 5, 2017
பின்னர் பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர். இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.