For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொச்சியில் தரையிறங்கியபோது பாதையிலிருந்து விலகிய ஏர் இந்தியா விமானம்... 102 பயணிகள் உயிர் தப்பினர்

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்துக்கு 102 பயணிகளுடன் அபுதாபியிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம் இன்று அதிகாலை தரையிறங்கியபோது பாதையிலிருந்து விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

கொச்சி: கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ஏர் -இந்தியா விமானம் தரையிறங்கியபோது திடீரென பாதையிலிருந்து விலகி ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அபுதாபியிலிருந்து 102 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று கொச்சி விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை 2.15 மணிக்கு வந்தது. அப்போது விமானம் தரையிறங்கத் தொடங்கியது.

Kochi-bound Air India flight veers off taxiway, passengers safe

அப்போது திடீரென நிலைதடுமாறி ஓடுபாதையை விட்டு விலகியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் கலக்கமடைந்தனர். எனினும் விமானி மிகவும் சாமர்த்தியத்துடன் செயல்பட்டதால் விமானம் இயல்பு நிலையை எட்டியது.

பின்னர் பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர். இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

English summary
A Kochi-bound Air India flight with 102 passengers on board veered off the way in the wee hours of Tuesday at the Kochi airport.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X