For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதலை புதுப்பித்த கையோடு அடுத்த கட்டத்திற்கு செல்லும் கோஹ்லி, அனுஷ்கா?

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் ஒரே வீட்டில் குடியிருக்க போகிறார்களாம். இதற்காக கோஹ்லி மும்பையில் ரூ. 34 கோடிக்கு அபார்ட்மென்ட் வாங்கியுள்ளாராம்.

திருமண விவகாரத்தால் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த பிப்ரவரி மாதம் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தற்போது அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டனர்.

அனுஷ்கா டெல்லிக்கு சென்று கோஹ்லியின் தாயை சந்தித்து பேசியுள்ளார்.

திருமணம்

திருமணம்

கோஹ்லியும், அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது. இருவரும் பழையபடி ஜோடிபோட்டு ஊர் சுற்றுகிறார்கள். ஆனால் காதலா என்று யார் கேட்டாலும் மவுனமாக இருக்கிறார்கள்.

அனுஷ்கா

அனுஷ்கா

கோஹ்லியும், அனுஷ்காவும் காதலை புதுப்பித்துள்ள போதிலும் அடுத்த கட்டத்திற்கு அதாவது திருமணம் செய்து கொள்ள அனுஷ்கா தயாராக இல்லையாம். முதலில் பாலிவுட்டில் கவனம் செலுத்த வேண்டும், அதன் பிறகு திருமணம் பற்றி யோசிக்கலாம் என்கிறாராம்.

வீடு

வீடு

டெல்லியில் தாயுடன் வசிக்கும் கோஹ்லி மும்பையில் ரூ.34 கோடிக்கு அபார்ட்மென்ட் வாங்கியுள்ளார். கோஹ்லியின் அபார்ட்மென்ட் 34வது மாடியில் உள்ளது. கடந்த ஆண்டே அனுஷ்காவுடன் சேர்ந்து பார்த்து வைத்த அபார்ட்மென்ட்டை தான் கோஹ்லி வாங்கியுள்ளார்.

கோஹ்லி

கோஹ்லி

அனுஷ்காவை இந்த ஆண்டே மணந்து செட்டிலாக விரும்புகிறார் கோஹ்லி. இந்நிலையில் அவர் மும்பை வீட்டில் அனுஷ்காவுடன் குடியேறக்கூடும் என்று கூறப்படுகிறது.

English summary
Love birds Kohli and Anushka Sharma may reportedly take another step in their love life very soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X