கொல்கத்தா பக்ரி மார்க்கெட்டில் தீ விபத்து.. தீயணைப்பு படையினர் விரைவு!
கொல்கத்தாவில் உள்ள பக்ரி மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள பக்ரி மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கன்னிங் தெரு அருகே உள்ள பக்ரி மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீ பரவியதாக கூறப்படுகிறது.
அதிகாலை 3 மணிக்கு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. விபத்தை தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து இருக்கிறது. தீயணைப்பு துறையினர் 30 வாகனங்களில் விரைந்து வந்தனர்.
அந்த பகுதியில் அடுத்ததடுத்து நிறைய கடைகள் இருப்பதால் தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதி ஆகும்.
இதனால் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 5 மணி நேரமாக தீயணைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விபத்தில் உயிர்சேதம் குறித்த தகவல் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை.