For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளியில் சொன்ன சுட்டு கொன்றுவேன்... மாணவியை மிரட்டி சீரழித்த ஆசிரியர்

பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் ஆசிரியரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். வெளியில் சொன்னால் சுட்டு கொன்று விடுவேன் என்று மிரட்டியே அந்த சிறுமியை சீரழித்திருக்கிறா

Google Oneindia Tamil News

கொல்கத்தா: டியூசன் படிக்க வந்த பத்தாம் வகுப்பு மாணவியை பல மாதங்களாக மிரட்டி பாலியல் பலாத்காரம் ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால் சுட்டுக்கொன்று விடுவேன் என்று மிரட்டியே பல மாதங்களாக சீரழித்துள்ளான் அந்த கயவன். கொல்கத்தாவில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பத்தாம் வகுப்பு படிக்கும் மேகலாவிற்கு ( பெயர் மாற்றம்) அறிவியல் என்றாலே கசக்கும். கஷ்டமா இருக்கே என்று வீட்டில் சொல்லவே கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அறிவியல் பாடத்திற்காக ராஜீவ் சக்கரவர்த்தி என்ற ஆசிரியரிடம் டியூசனுக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில மாதங்களாகவே மகளின் உடல் நிலையிலும் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டதை பார்த்த பெற்றோர்கள் சந்தேகமடைந்தனர். டியூசன் படிக்க பிடிக்கலையோ என்று நினைத்து பேசாமல் இருந்தனர்.

Kolkata teacher sexually assaults class 10 student, threatens to shoot her dead

எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, அடம் பிடிப்பது என மேகலாவிடம் பிரச்சினைகள் அதிகரித்தன. என்னவாக இருக்கும் என்று யோசித்த பெற்றோர்கள் மேகலாவிடம் பேச்சு கொடுத்தனர். வெடித்து கதறிய மேகலா தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறியதைக் கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

டியூசன் படிக்கப் போன இடத்தில் அந்த கயவன் தொடக்கூடாத இடத்தில் தொட்டு பேசுவான், நாளாக நாளாக அவனது பாலியல் தொந்தரவு அதிகரித்தது. கடந்த சில மாதங்களாக அவனது பாலியல் இச்சைக்கு தன்னை முழுவதுமாக பயன்படுத்திக்கொண்டான் என்று பெற்றோரிடம் கூறினாள் மேகலா.

தான் செய்யும் காரியத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால் சுட்டுக்கொன்று விடுவேன் என்று துப்பாக்கியை காட்டி மிரட்டியே காரியத்தை சாதித்ததாக கூறினாள். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாதல் மனசுக்குள் புழுங்கிய மேகலா, மன அழுத்தத்திற்கு ஆளாகி யாரிடமும் பேசாமல் ஒதுங்கியதாக மகள் கூறியதைக் கேட்டு பெற்றோர்கள் ஆத்திரமடைந்தனர்.

மேகலா உடன் காவல் நிலையத்திற்கு சென்ற பெற்றோர்கள், டியூசன் ஆசிரியர் சக்ரவர்த்தி மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். புகாரின் பேரில் டியூசன் ஆசிரியரை கைது செய்து போஸ்கோ சட்டம், சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். நீதிபதியின் முன்பாக ஆஜர்படுத்திய போலீசார் எட்டு நாட்கள் போலீஸ் கஷ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

English summary
A tuition teacher in Kolkata has been arrested by the police after he allegedly sexually assaulted a student of class 10 and threatened to shoot her dead if she told anybody of the incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X