For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவில் கன மழையால் நிலச்சரிவு.. குழந்தைகள் உட்பட 7 பேர் பலியான சோகம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளாவில் கன மழையால் நிலச்சரிவு | தொடரும் கனமழை- வீடியோ

    கோழிக்கோடு: கேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளளனர்.

    கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    Kozhikode landslide kills 7

    தொடர் மழையால் கோழிக்கோடு மாவட்டம் தாமரைச்சேரி உள்ளிட்ட சில பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைச்சரிவில் இருந்த பல வீடுகள் மற்றும் வயலில் பயிரிடப்பட்ட பயிர்கள் அடித்துச்செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகள் கடுமையாக சேதம் அடைந்தன.

    நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் இறந்தனர். 9 பேர் மாயமானார்கள். சிறப்பு தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தது.

    Kozhikode landslide kills 7

    அதன்படி 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவில் சிக்கிய 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மாயமான 9 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    English summary
    Four people, including three children, died and at least 10 others were reported missing after a landslide struck a remote village in Kozhikode district on Thursday, as heavy rainfall continued to batter northern Kerala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X