கோழிக்கோடு விமான விபத்து.. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்
கோழிக்கோடு: கோழிக்கோடு விமான விபத்துக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட்டில், கேரளாவின் கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து கேள்விப்பட்டதில் மிகுந்த மனவேதனையடைகிறேன். இதுதொடர்பாக, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானிடம் பேசினேன். நிலைமை குறித்து விசாரித்தேன். பாதிக்கப்பட்ட பயணிகள், விமான ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்துகொள்கிறேன். இவ்வாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு 184 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட 191 பேருடன் இன்று இரவு வந்திறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்தது. இதில் விமானி உட்பட சுமார் 11 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.