காஷ்மீரில் ராணுவத்தினர் திடீர் துப்பாக்கி சூடு.. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீர் மாநிலம் குல்ஹாம் பகுதியில் ராணுவத்தினர் திடீர் என்று நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் குல்ஹாம் பகுதியில் ராணுவத்தினர் திடீர் என்று நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காவலர் முகமது சலீம் தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டார். கடும் சித்திரவதைக்கு பின் அவர் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புள்ள தீவிரவாதிகளை ராணுவத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று இன்று குல்ஹாம் வனபகுதியில் திடீரென்று ராணுவ வீரர்கள் சோதனை நடத்தினர். அங்கு தீவிரவாதிகள் தங்கி இருப்பதாக கொடுக்கப்பட்ட தகவலில் பேரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
தேடுதலின் முடிவில் ராணுவத்துக்கும், தீவிரவாதிக்கும் இடையில் துப்பாக்கிசூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூடு 2.30 மணி நேரம் நடந்தது.இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராணுவத்தின் தரப்பில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.மோசமான தாக்குதலில் 2 ராணுவத்தினர் லேசாக காயம் அடைத்துள்ளனர்.காவலர் முகமது சலீமை கடத்திக் கொலை செய்த 3 பேரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.