For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயாவுக்கு இப்படி ஒரு கதியா.. நல்ல மனசுக்கார பெண்.. சத்தமா கூட பேச மாட்டார்.. சோகத்தில் உறவினர்கள்

தாசில்தார் கொலை செய்யப்பட்டதில் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி ... தீ வைத்து எரித்த விவசாயி

    நல்கொண்டா: விஜயா ரெட்டி அதிர்ந்து கூட பேச மாட்டார். அத்தனை நல்ல மனசு உள்ள பெண். சமூக சேவையில் அதிக நாட்டம் உடையவர். அவருக்கு இப்படி ஒரு கதியா என்று அவரது உறவினர்கள், நண்பர்கள், பள்ளி ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    விஜயா ரெட்டி பணியாற்றியது ரெங்கா ரெட்டி மாவட்டம் என்றாலும் கூட அவரது குடும்பத்தினரின் பூர்வீகம் நல் கொண்டா மாவட்டம்தான். நல் கொண்டா மாவட்டம் பெரிகாகொண்டாரம் என்ற கிராமம்தான் விஜயா ரெட்டியின் தந்தை லிங்கா ரெட்டியின் பூர்வீகம். அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    பணி நிமித்தம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பணியாற்றிய அவர் கடைசியாக 20 வருடங்களுக்கு முன்பு அதே மாவட்டத்தின் நக்ரேகல் கிராமத்தில் செட்டிலானார்.

    மொத்தமே 3 நிமிஷம்தான்.. முழுசா எரிந்து கருகிட்டார்.. மின்னல் நேரத்தில் எல்லாம் முடிஞ்சு போச்சு!மொத்தமே 3 நிமிஷம்தான்.. முழுசா எரிந்து கருகிட்டார்.. மின்னல் நேரத்தில் எல்லாம் முடிஞ்சு போச்சு!

    ஆசிரியை

    ஆசிரியை

    விஜயா ரெட்டிக்கு நேர்ந்த கதியால் நல்கொண்டா மாவட்டம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. விஜயா ரெட்டி படித்ததெல்லாம் நக்ரேகல்லில்தானாம், கல்லூரிப் படிப்பை நல்கொண்டாவில் முடித்துள்ளார். பிஎட் படித்துள்ளார். ஆரம்பத்தில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார்.

    காலேஜ்

    காலேஜ்

    2008ம் ஆண்டு இவருக்கும் கல்லூரி ஆசிரியர் புட்ட சுபாஷ் ரெட்டிக்கும் திருமணம் ஆனது. 2011ல் டெபுட்டி தாசில்தாராக பணியில் சேர்ந்தார். குரூப் 2 தேர்வு எழுதி இந்தப் பணிக்கு வந்தார். தான் டெபுடி தாசில்தார் ஆனதும் தான் படித்த பள்ளிக்குப் போய் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து மகிழ்ந்துள்ளார்.

    சமூக சேவை

    சமூக சேவை

    இதுகுறித்து அவர் படித்த ஏவிஎம் பள்ளி ஆசிரியர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில் "நல்லா படிப்பார். அமைதியானவர், சமூக சேவையில் அதிக நாட்டம் கொண்டவர். அவருக்கு ஏற்பட்ட முடிவால் அதிர்ச்சியில் உள்ளோம். இதை எதிர்பார்க்கவே இல்லை என்றார்.

    கலக்கம்

    கலக்கம்

    தனது மகளுக்கு ஏற்பட்ட கோர முடிவால் விஜயாவின் தந்தை லிங்கா ரெட்டி பெரும் வேதனையில் ஆழ்ந்துள்ளார். அவரால் மகள் இப்படி கருகிப் போய் உயிரிழந்ததை தாங்கவே முடியலையாம். அவரை தேற்ற வழி தெரியாமல் உறவினர்கள் கலங்கிப் போயுள்ளனர். விஜயாவின் தாயாரும் இடிந்து போய் அழுதபடி உள்ளாராம்.

    விஜயா - சுபாஷ் ரெட்டி தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இருவருமே அம்மாவின் உடல் கூட மிஞ்சாத அளவுக்கு கருகிப் போய் கொடூரமாக பலியானதை நினைத்து அழுதபடி உள்ளனராம்.

    English summary
    lady tahsildar vijaya reddy killed case issue: relatives praise vijayas good qualities
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X