மிசோரம் மாநில முதல்வராக தான்காவ்லா 5வது முறையாக பதவியேற்றார்!
அஸ்வால்: மிசோரம் மாநிலத்தின் முதல்வராக தான்க்வால்கா 5வது முறையாக இன்று பதவியேற்றார்.
40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநில தேர்தல் கடந்த மாதம் 25-ந் தேதி நடந்தது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.
முதல்வரை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், சட்டசபை காங்கிரஸ் தலைவராக முதல்வர் லால் தன்காவ்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், துணைத்தலைவராக அமைச்சர் லால்சிர்லினா, பொருளாளராக அமைச்சர் சோடின்லிங்கா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து லால் தன்காவ்லா இன்று அஸ்வாலில் நடைபெற்ற விழாவில் மிசோரம் மாநில முதல்வராக 5-வது முறையாக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் வைக்கம் புருஷோத்தமன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இம்மாநிலத்தின் முதலாவது சட்டசபை கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.