For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இறந்த தந்தையின் "உத்தரவின் பேரில்" புராரி தற்கொலையை நடத்திய மகன்... திடுக் தகவல்

இறந்த தந்தையின் உத்தரவின் பேரில் புராரி தற்கொலையை மகன் லலித் பாட்டியா நடத்தியதாக தகவல் கிடைத்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லி 11 பேர் தற்கொலை..வீடியோ

    டெல்லி: இறந்த தந்தையின் உத்தரவின் பேரில் புராரி தற்கொலையை மகன் லலித் பாட்டியா நடத்தியாக கூறப்படுகிறது.

    டெல்லியில் புராரி பகுதியில் 11 பேர் கொத்தாக தற்கொலை செய்து கொண்டிருந்தனர். இது கொலையாக இருக்கலாம் என்றிருந்த போலீஸார் தற்போது தற்கொலை என ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர்.

    வீட்டிலிருந்து கிடைக்கப் பெற்ற அமானுஷ்ய குறிப்புகள் மூலம் போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து இந்த தற்கொலைக்கு காரணம் இறைவனை பார்ப்பது என்ற மூடநம்பிக்கைதான் என்று போலீஸார் கருதுகின்றனர்.

    தந்தை குரல்

    தந்தை குரல்

    இந்த தற்கொலை சம்பவத்தில் பெரும் பங்கு நாராயணனின் மகன் லலித் பாட்டியாவுக்கு உண்டு. அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தந்தையை போல் நடந்து கொண்டதாக தெரிகிறது. சில நேரங்களில் தந்தையின் குரலிலும் அவர் பேசுவாராம்.

    அதீத நம்பிக்கை

    அதீத நம்பிக்கை

    தந்தைதான் தற்போது குடும்பத்தை வழி நடத்தி வருகிறார் என்ற எண்ணம் லலித்துக்கு உண்டு. இதனால் நாம் தற்கொலை செய்து கொண்டாலும் தந்தை காப்பாற்றுவார் என்று அதீத நம்பிக்கையும் இவருக்கு இருந்திருக்கிறது.

    உண்ண வேண்டும்

    உண்ண வேண்டும்

    இவர் தந்தை போலவே செயல்படுவதால் மற்ற உறுப்பினர்களும் இதையே நம்பியுள்ளனர். இதையடுத்து இறப்பதற்கு முன்பு 20 சப்பாத்திகளை வாங்கியுள்ளனர். அதற்கு தொட்டு கொள்ள எதையும் வாங்கவில்லை. அந்த சப்பாத்திகளை தாய் நாராயண் கைகளால் அனைவரும் உண்ண வேண்டும் என்று குறிப்பில் இருந்துள்ளது.

    மாற்றம் இல்லை

    மாற்றம் இல்லை

    இந்த சப்பாத்திகளை டெலிவரி செய்த பையனிடமும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. டெலிவரி செய்யும் போது அந்த குடும்பத்தினரிடம் எந்தவித மாற்றமும் தெரியவில்லை என்று போலீஸாரிடம் கூறியுள்ளார்.

    தந்தை காப்பாற்றுவார்

    தந்தை காப்பாற்றுவார்

    இதையடுத்து தற்கொலை செய்வதற்கு முன்னர் லலித் எழுதிய குறிப்புகள் கிடைத்துள்ளன. அதில் தற்கொலை செய்துகொண்டால் தந்தை காப்பாற்றுவார் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் கடைசி நேரத்தில் உங்கள் கடைசி ஆசையை சொல்லும்போது மேகங்களில் வெடிப்பு ஏற்படும், பூமி நகரும் என அனைவரும் சப்தமாக கத்தினால் நான் வருவேன் , வந்து உங்களை காப்பேன் என்று தந்தை சொல்வதை போல் லலித் எழுதியிருந்தார்.

    English summary
    Lalit, son of Narayan Devi, who was one of the eleven persons found dead in Burari area of Delhi, was hallucinating and carried out the mass suicide on the directions of his father, who passed away 10 years ago and Lalit dreamt of, police said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X