For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையிலிருந்து வந்த 'சாத்தான்'.. சீனிவாசன் மீது லலித் மோடி கடும் தாக்குதல்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன் நவீன காலத்து ராவணன், செனனையலிருந்து வந்த சாத்தான் என்று படு காட்டமாக விமர்சித்திருக்கிறார் ஐபிஎல் ஊழலுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து தப்பித்துப் போய் லண்டனில் பதுங்கியிருக்கும் லலித் மோடி.

உச்சநீதிமன்றம் சீனிவாசனுக்கு எதிராக அளித்துள்ள தீர்ப்பைத் தொடர்ந்து அதுகுறித்து லலித் மோடி கருத்து தெரிவித்துள்ளார். அதைப் பார்த்தால் கருத்து தெரிவித்தது போலவே இல்லை, காரித் துப்பியது போலவே ஒரு பீலிங்.

இதுகுறித்து லலித் மோடி டிவிட்டரில் கூறியுள்ளதாவது....

நவீன ராவணன்

நவீன ராவணன்

நவீன காலத்து ராவணன் இந்த சீனிவாசன். இவர் ஒரு சாத்தான்.

அபாரமான தீர்ப்பு

அபாரமான தீர்ப்பு

உச்சநீதிமன்றம் சீனிவாசனுக்கு எதிராக பிறப்பித்த உத்த்தரவு அபாரமானது, வரவேற்புக்குரியது. உறுதியான தீர்ப்பு இது.

வெளியே பிடித்துத் தள்ளுங்கள்

வெளியே பிடித்துத் தள்ளுங்கள்

உலக அளவில் கிரிக்கெட் நலம் பெற இது நன்மை பயக்கும். கடைசியில் சீனிவாசனை வெளியே பிடித்துத் தள்ள வழி பிறந்துள்ளது.

சென்னையிலிருந்து வந்த சாத்தான்

சென்னையிலிருந்து வந்த சாத்தான்

இந்திய கிரிக்கெட் வாரியத்தினர் இனியாவது சென்னையிலிருந்து வந்த இந்த சாத்தானை வெளியேற்ற வேண்டும்.

விரட்டியடியுங்கள்

விரட்டியடியுங்கள்

அனைத்து அரசுத் துறையிலும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வரும் சீனிவாசனை விரட்ட வேண்டும்.

காத்திருக்கிறேன்

காத்திருக்கிறேன்

நவீன காலத்து ராவணன் வெளியேற்றப்பட்டார் என்ற செய்திக்காக இந்த வருடத்து தசராவை நான் எதிர் பார்த்துக் காத்திருக்கிறேன்.

ஆனா இவுரு மட்டும்..

ஆனா இவுரு மட்டும்..

இப்படி வாய்க்கு வாய் கழுவி ஊற்றியிருக்கும் இந்த லலித் மோடியே கோர்ட் தீர்ப்புகளை மதிக்காமல், சென்னையில் இவர் மீது குவிந்திருக்கும் பெரும் ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்காமல் லண்டனிலேயே தொடர்ந்து ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
Former IPL chairman Lalit Modi has continued his battle against BCCI president N Srinivasan and today called him a "Monster" and "modern day Ravan". On Tuesday, Srinivasan was handed a major setback by the Supreme Court which said he should step down from the post of BCCI President in order to ensure a fair probe into the IPL spot-fixing scandal. Modi, who has been involved in a bitter battle with Srinivasan after being ousted from IPL on various charges, took to the micro-blogging site Twitter once again to air his views. "Kudos to the Honourable Supreme Court for taking the most decisive action to say global cricket. Finally they have shown the door to Srini," he wrote. "Hope my colleagues in Bcci will now once and forever get rid of this Monster from Chennai who had cemented himself in all governing bodies," he added in another tweet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X