லாலு வழக்கு.. முக்கா முக்கா மூனாவது வாட்டியாக தீர்ப்பு ஒத்திவைப்பு!
லாலு வழக்கில் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதாக ராஞ்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ராஞ்சி: லாலு வழக்கில் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதாக ராஞ்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் தெரிவித்துள்ளார். நாளை தீர்ப்பு விவரம் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
லாலு பிரசாத் மீதான மாட்டுத் தீவன ஊழல் வழக்கு கடந்த 21 வருடங்களாக நடந்து வந்தது. 1990-ம் ஆண்டு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பாட்னா ஐகோர்ட் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. அப்போது ஆரம்பித்த வழக்கு விசாரணை கடந்த வருடம்தான் முடிந்தது.
இந்த நிலையில் டிசம்பர் இறுதி வாரம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு விவரம் கொடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் முதலில் ஜனவரி இரண்டாம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அன்று இந்த வழக்கில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் விந்தேஷ்வரி பிரசாத் திடீரென மரணமடைந்தார். அதனால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து, லாலு உட்பட 16 பேருக்கான தண்டனை விபரங்கள் நேற்று அறிவிக்கப்படும் எனப்பட்டது. ஆனால் லாலு மீது கோபத்தில் இருந்த நீதிபதி சிவபால் சிங் நேற்றும் தண்டனையை அறிவிக்காமல் ஒத்திவைத்தார்.
பின் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இன்றும் நீதிபதி தீர்ப்பு விவரங்களை அளிக்க மறுத்துவிட்டார். மேலும் நாளை தீர்ப்பு விவரம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.