மகனுக்கு பாட்னாவில் திருமணம்.. லாலு பிரசாத்திற்கு 5 நாள் பரோல்!
மாட்டு தீவன வழக்கில் சிறைத்தண்டனை பெற்று இருக்கும் லாலு பிரசாத் யாதவிற்கு அவரது மகன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பரோல் வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்று இருக்கும் லாலு பிரசாத் யாதவிற்கு அவரது மகன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பரோல் வழங்கப்பட்டுள்ளது.
மாட்டு தீவன வழக்கில் சிறைத்தண்டனை பெற்று இருக்கும் லாலு பிரசாத், ராஞ்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு ரத்த கொதிப்பு, சக்கரை வியாதி உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருக்கிறது என்று ராஞ்சி ராஜேந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
பின் அங்கு இருந்து மாற்றப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மீண்டும் லாலு பிரசாத் யாதவ், ராஞ்சி மருத்துவமனையிலேயே சிகிச்சையை பெற்று வருகிறார். அவருக்கு ரத்த கொதிப்பு உள்ளிட்ட நிறைய பிரச்சனைகள் இருக்கிறது.
இந்த நிலையில்தான் தற்போது லாலு பிரசாத் யாதவிற்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு மொத்தம் ஐந்து நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. அவரது மகன் தேஜ் பிரதாப் யாதவிற்கு இந்த வாரம் திருமணம் நடக்க இருக்கிறது. இதற்காக அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
வரும் மே 12ம் தேதி பாட்னாவில் இந்த திருமணம் நடக்க உள்ளது. எம்எல்ஏவாக இருக்கும் பிரதாப் யாதவ் கடந்த வாரம் இந்த பரோலுக்காக விண்ணப்பம் செய்து இருந்தார். இந்த நிலையில் நாளையில் இருந்து ஏப்ரல் 14ம் தேதி வரை லாலு பிரசாத்துக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.