For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாலு பிரசாத் யாதவின் சகோதரி மரணம்.. பரோல் கேட்கிறாரா?

லாலு பிரசாத் யாதவின் சகோதரி உடல்நல குறைவால் இன்று காலை மரணம் அடைந்தார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

ராஞ்சி: லாலு பிரசாத் யாதவின் சகோதரி உடல்நல குறைவால் இன்று காலை மரணம் அடைந்தார். லாலு இதன் காரணமாக பரோல் கேட்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

லாலு பிரசாத் மீதான மாட்டுத் தீவன ஊழல் வழக்கு கடந்த 21 வருடங்களாக நடந்து வந்தது. 1990-ம் ஆண்டு ஆரம்பித்த வழக்கு விசாரணை கடந்த வருடம்தான் முடிந்தது.

Lalu Prasad Yadav sister dies a day after sentence

இந்த நிலையில் டிசம்பர் இறுதி வாரம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு விவரம் கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் மூன்று முறை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு கடந்த 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் 5 லட்சம் ரூபாய் அபாரதம் விதித்தது.

இந்த நிலையில் லாலு பிரசாத்தின் ஒரே சகோதரியான கங்கோத்ரி தேவி இன்று அதிகாலை மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக இவர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக லாலு பரோல் கேட்பார் என கூறப்படுகிறது. கங்கோத்ரி தேவி லாலுவை விட 4 வயது மூத்தவர் ஆவார்.

லாலு வழக்கில் தண்டனை பெற்றதால் இவர் மனம் உடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் வழக்கு தீர்ப்பு அன்று இவர் பிராத்தனை செய்ததாகவும் கூறப்பட்டு இருக்கிறது. லாலு இதனால் இன்று அவரின் சொந்த ஊருக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

English summary
Ranchi CBI court sentences Lalu Prasad Yadav to 3.5 years in jail, fines him Rs 5 lakh in fodder scam. And another accused Jagdish Sharma gets 7 years in jail, imposed with a fine of Rs. 10 lakh. A day after this sentence, Lalu Prasad Yadav sister dies. Lalu will seek for the bail today morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X